கோவை நவகரையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வணிகத்துறை சார்பில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து ஒருநாள் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி நடத்தினார். ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) தங்கவேலு தலைமை தங்கினார்.

கருத்தரங்கில், ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி பேசுகையில்; தினசரி ஆங்கில பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். மேலும் நாம் தினசரி செய்தி படிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் தகவல்கள் அறிய முடிகிறது. மேலும் அதை பற்றிய செய்திகள் சேகரித்தும் அது மற்றவர்களுடன் பேசுகையில் பல்வேறு தகவல் நமது அறிவுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது. மேலும், நாம் செய்திதாள் படிக்கும் போது, அதில் உள்ள சுவாரசியமான தகவல்கள் மூலம் நீங்கள் ஒரு குழு மத்தியில் தலைவராக நின்று புள்ளி விவரங்களுடன் உரையாற்றுவதற்கும் நம் பாடங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மேலும், செய்தி சேனல்கள் பார்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் எவ்வாறு கருத்தாக பயன்படுகிறது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் உங்கள் சுய முயற்சியில் ஈடுபடும் போது நீங்கள் ஒரு நல்ல வழியில் வணிக உலகில் தொடர்பை பயன்படுத்தி முன்னேற முடியும் "என்று அவர் கூறினார்.

கருத்தரங்கில், ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி பேசுகையில்; தினசரி ஆங்கில பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். மேலும் நாம் தினசரி செய்தி படிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் தகவல்கள் அறிய முடிகிறது. மேலும் அதை பற்றிய செய்திகள் சேகரித்தும் அது மற்றவர்களுடன் பேசுகையில் பல்வேறு தகவல் நமது அறிவுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது. மேலும், நாம் செய்திதாள் படிக்கும் போது, அதில் உள்ள சுவாரசியமான தகவல்கள் மூலம் நீங்கள் ஒரு குழு மத்தியில் தலைவராக நின்று புள்ளி விவரங்களுடன் உரையாற்றுவதற்கும் நம் பாடங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மேலும், செய்தி சேனல்கள் பார்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் எவ்வாறு கருத்தாக பயன்படுகிறது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் உங்கள் சுய முயற்சியில் ஈடுபடும் போது நீங்கள் ஒரு நல்ல வழியில் வணிக உலகில் தொடர்பை பயன்படுத்தி முன்னேற முடியும் "என்று அவர் கூறினார்.